உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|கொழும்பு) – எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று(25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று(24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளதுடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிபார்சுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனு

editor

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா

விலையினை குறைக்க, முட்டை இறக்குமதி செய்யப்பட வேண்டும்