சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

(UTV|COLOMBO) எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
ஆரம்ப கட்டமாக மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும்.
இதன்பின்னர் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்