சூடான செய்திகள் 1

எதிர்கட்சி தலைவர் சபாநாயகருக்கு கடிதம்

(UTV|COLOMBO) எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21 வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்தநிலையில் அந்த விவாதத்தை பிற்பகல் 1 மணி முதல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை…