உள்நாடு

ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க இதுவரையில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்குப் பின்னர் நீடிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் !

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை