உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2020ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என இன்று(19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச தகவல் பணிப்பாளர் நாலக களுவாவ தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் இதுவரையில் 4337 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சுமார் 3200 அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவு

editor

ஹப்புத்தளை விமான விபத்து தொடர்பில் ஆராய இரசாயன பகுப்பாய்வு குழு