தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கூட உள்ளன.
இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.