உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 12 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் எவ்பிஐ நிறுவனம் , அவுஸ்திரேலியாவின் பிராந்திய பொலிஸ் உட்பட சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்

editor

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்