உள்நாடு

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று(04) மற்றும் நாளை (05) இவர்கள் குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதால் இன்று பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

அதேபோன்று, நாளை நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

editor

ஒரு மாதத்திற்குள் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

editor