உள்நாடு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலை அறிய

(UTV | கொழும்பு) – உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு 24 மணிநேரமும் செயற்படக்கூடிய தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

+90-534-456-9498,
+90-312-427-1032

இதேவேளை, உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை