சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

(UTV|COLOMBO)-இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முன்னெடுக்கப்படும் இறப்பர் செய்கையின் ஒரு ஹெக்டேயருக்காக, 3 இலட்சம் ரூபா வரை நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

இடியுடன் கூடிய மழை

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்