உள்நாடு

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

(UTV | கொழும்பு) – 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியினை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஏதெனுமொரு தடுப்பூசி மையத்திற்கு சென்று செலுத்திக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய சேவை நாளை..!