உள்நாடு

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் முற்றாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கமொன்றில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும் என்ற போதிலும் ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே அவசர சந்திப்பு

editor