உள்நாடு

ஆசிரியர் சேவைக்கான நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – தர்ம ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நேர் முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நேர்முகப் பரீட்சை இம் மாதம் 24 ஆம் திகதி முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் சுற்றிவளைப்பு

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்