உள்நாடு

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது எவ்வித உற்சவ நிகழ்வுளையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அணிவகுப்புகள் மற்றும் குதிரைப்படை அணிவகுப்புகள் நடத்தப்படாது என்றும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் ஜனாதிபதியை வரவேற்க மட்டுமே ஜெயமங்கள பாடல்கள் பாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வௌியிடப்பட்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2023

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

editor

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்